தினமும் 5 ஆயிரம் கொடுத்தாதான் உன் கூட வாழுவேன் - மனைவியின் பேச்சால் அதிர்ந்து போன கணவன்.!
man petition against wife in banglore
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் வசித்து வருபவர்கள் ஸ்ரீகாந்த் - பிந்துஸ்ரீ தம்பதியினர். இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போதில் இருந்தே இந்தத் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும், பிந்துஸ்ரீ குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு பிந்துஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தனது மனைவி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார்.
அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் தினமும் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார். விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். கணவன், மனைவி பிரச்சினையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்து இருப்பது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man petition against wife in banglore