மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் - தலைமை ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு.!
teacher sucide for harassment in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, மாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேட் அயூப்கான். கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வரும் இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மனைவியின் பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரையடுத்து, நேற்று குழந்தை நல அலுவலர்கள், பள்ளிக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தலைமையாசிரியர் சேட் அயூப்கான் வழக்கம் போல் தனது வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். ஆனால் இன்று காலை சேட் ஆயூப்கான் நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை.
இதனால் அவரது மனைவி கணவனை எழுப்புவதற்கு அவரின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரால் தலைமை ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher sucide for harassment in ramanathapuram