தென்காசி எம்எல்ஏ., யார்? நீதிமன்ற தீர்ப்பை மீறும் அதிகாரிகள்?! தபால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது தென்காசி சட்டமன்ற தொகுதிகள் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு தபால் வாக்குகள் எண்ண தொடங்கியது. 13 சி என்ற பெட்டியில் உள்ள தபால் வாக்குகளை மட்டுமே அதிகாரிகள் எண்ணி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வேட்பாளர், உயர்நீதிமன்றம் அனைத்து வாக்கு பெட்டிகளையும் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் ஏன் ஒரு பெட்டியில் உள்ள வாக்கை மட்டும் எண்ணுகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் மூன்று வாக்கு பெட்டிகளையும் எண்ண கூறி தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதையும் சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து தேர்தல் அதிகாரிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பில் என்ன குறிப்பிட்டுள்ளது, அதிமுக வேட்பாளர் சொல்வது சரியா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வரை தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கவில்லை.

இதற்கிடையே, போலீசார் மற்றும் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் ,வாக்குச் சீட்டின் மேல் உள்ள கவரை எடுத்துவிட்டு, வாக்கு சீட்டை மட்டும் எண்ணிக்கை உட்படுத்துவதாகவும், மாவட்ட நிர்வாகம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதன் காரணமாக தபால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tenkasi Postal Vote Counting issue ADMK report


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->