காஞ்சிபுரம்.! கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மாங்காடு அருகே கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.

மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 15 வயது மகன் ரித்திக் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்கு ரித்திக் சென்றுள்ளான.

அப்பொழுது அங்கிருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை பட்டதில் ரித்திக் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளான்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரித்திக்கை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர் ரித்திக் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy was electrocuted


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->