தமிழகத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அருகே பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

வரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இரண்டு ரயில்களும் மோதிக்கொண்டதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து இருந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.

மேலும், ரயில் பெட்டிகளில் எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

விபத்துக்குள்ளான ரயில் மைசூரில் இருந்து பெரம்பூர் வழியாக தர்பங்கா சென்ற பயணிகள் ரயில் என்பது தெரிய வந்துள்ளது.

பயணிகள் ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து உள்ளன. ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvallur passenger train goods train accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->