திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன கட்டணம் பல மடங்கு உயர்வு.. பக்தர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன கட்டணம் 50 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்குகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக மாதம்தோறும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி பௌர்ணமி நாட்களை கிரிவலம் செல்ல தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசன கட்டடம் 50 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai temple dharshan ticket price increase


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->