#திருவண்ணாமலை | யுகேஜி படிக்க வந்த 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தாளாளர் கணவன்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம்m சேத்துப்பட்டு அருகே செயல்பட்டு வரக்கூடிய தனியார் பள்ளியில், யுகேஜி படித்து வந்த நான்கு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி தாளாளர் பிரபாவதி கணவர் காமராஜ் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


10 தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற குழந்தைக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால், பெற்றோர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்தபின் குழந்தையை கடந்த வாரம் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், மீண்டும் சிறுமிக்கு உடல் உபாதை ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்கள் நேரடியாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து பெற்றோர்கள் பள்ளிகள் வந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். இதற்கு பள்ளி தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமியை அழைத்துக்கொண்டு பள்ளி அலுவலகத்தில் இருந்த புகைப்படங்களை காட்டி, இதில் யார் உனக்கு தொந்தரவு கொடுத்தது என்று கேட்டுள்ளனர். 

அதற்கு சிறுமி பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜரின் புகைப்படத்தை கை காட்டியது. இதனை அடுத்து போலீசார் காமராஜர் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai UKG Girl Abuse Case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->