தூத்துக்குடி | கடலில் தவறி விழுந்து மீனவர் பலி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது:

தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவர் மீன்பிடி தொழிலை செய்து வருபவர். இவர் கடந்த 7 ஆம் தேதி இவருக்கு சொந்தமான படகில் ஜவகர் உள்பட 8 மீனவர்களுடன் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். 

நேற்று இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசி படகிலிருந்து ஜவகர் கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். 

இதில் ஜவகர் கடலில் தத்தளித்த நிலையில் மூச்சு திணறி உயிரிழந்தார். இதனை அடுத்து சக மீனவர்கள் இன்று காலை உயிரிழந்த ஜகவர் உடலை மீட்டு தூத்துக்குடி கொண்டு வந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மீனவர் ஜெகவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Fisherman died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->