கோவை.! கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக காவல்துறையினர், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் நால்ரோடு பகுதியில், கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்களை பிடித்து, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் அவர்கள் மூன்று பேரும், வாகராயம்பாளையத்தை சேர்ந்த தீபக் குமார், சந்தோஷ் மற்றும் சதீஷ்குமார் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three people were arrested for selling cannabis


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->