சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.!! மாணவர்களுக்கான அதிர்ச்சி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் சனிக்கிழமைகளில் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

கனமழையின் காரணமாக இன்று விடுமுறை விடப்பட்ட பள்ளிகளின் வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNgovt announced schools working day on Saturdays


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->