தேவகோட்டை அருகே சோகம்!...வேன் - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து!...சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் பவுல் டேனியல், அவரது மகள்கள் சூசன்ரெகுமா, ஹெலன் சாமா,  சித்தப்பா  மைக்கேல் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உறவினர் வீட்டு விசேசத்துக்காக திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இதே போல், மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு டெம்போ வேனில் சென்று கொண்டிருந்துள்ளனர். 
அப்போது  தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேனும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோரா விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். 

மேலும்  இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் 9 மலேசிய நாட்டினர் காயமடைந்த நிலையில், காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy near Devakottai Van car head on collision 4 people died on the spot


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->