திருச்சி அருகே மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியில் இரண்டு தரப்பினர் இடையே நடந்த மோதலில் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 

முதல் கட்ட தகவலின் படி அபிஷேக், மோகன் மற்றும் அவரது சகோதரருக்கு இடையேயான கோஷ்டி மோதலின் போது இந்த அரிவாள் வெட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. 

இந்த இரு தரப்பு மோதல் தொடர்பாக விஷ்ணு, ஹாரூன், ராஜகணபதி, சம்பத் நாராயணன் ஆகிய நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காவிரி ஆற்றில் குளித்த இளைஞர் நீரின் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மாயனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது மூன்று நண்பர்கள் உடன் குளித்த நிலையில், இளைஞர் பிரசாத் (23 வயது) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy People clash


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->