தூத்துக்குடி | கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாப பலி!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, லயன்ஸ் டவுனை சேர்ந்த பொன்சால் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சுதாகர்  (வயது 45) என்பவர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார். 

இரவு மீன் பிடித்துவிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து விசைப்படகை கயிறு மூலம் கட்டிவிட்டு படகிலிருந்து சுதாகர் இறங்கும் பொழுது திடீரென கால் தவறி கடலில் விழுந்து மூழ்கியுள்ளார். 

இதனை அடுத்து சக மீனவர்கள் கடலில் குவித்து காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tuticorin Fisherman died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->