காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது!
Two arrested for smuggling 30 kg of ganja in car
காரில் 30 kg கஞ்சா கடத்திய தேனி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இசக்கி ராஜ் ஆகியோரை கன்னியா குமரி மாவட்டம் இரணியல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு முதல் நான்கு மாதத்தில் நடைபெற்ற கொலை கொலை, விபத்து உயிரிழப்புகள் இந்த ஆண்டு 60 விழுக்காட்டிருக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் 200 கிலோ போதை பொருட்கள் சிக்கியது.
இந்தநிலையில் காரில் 30 kg கஞ்சா கடத்திய தேனி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இசக்கி ராஜ் ஆகியோரை கன்னியா குமரி மாவட்டம்இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சேர்ந்து கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் இரண்டு செல்போன்கள் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Two arrested for smuggling 30 kg of ganja in car