திண்டுக்கல் || சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் கைது - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல்துறையினர் ஏ.வி.பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது டாஸ்மாக் கடையை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த சக்திவேல் என்பவரை கைது செய்துள்ளனர். 

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், அவரிடமிருந்த 69 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் காணப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர். 

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிங்காரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த 63 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கணேசனை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two persons arrested for liquor selling in Dindigul


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->