புதுக்கோட்டை || மது விற்பனை செய்த இரண்டு பேர் கைது - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆண்டிகுளம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கல்லுகுண்டு காரையை சேர்ந்த முருகேசன்(51) மற்றும் கோங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(55) என்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two persons arrested for liquor selling in Pudukkottai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->