உதயநிதி ஸ்டாலின்தான் துணை முதலமைச்சர் ! ஸ்டாலின் முன் பேசிய அன்பில் மகேஷ்!! - Seithipunal
Seithipunal


சென்னை : எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உதயநிதி ஸ்டாலின்தான் துணை முதலமைச்சர் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் ஐம்பெரும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். கலந்து கொண்ட மு.க ஸ்டாலின், அரசு பள்ளியில் படித்து பொது தேர்வில் தாய்மொழி தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களை எடுத்த 43 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அதேபோல் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதன் பின்னர் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தங்களைப் போன்று இளைஞர்களுக்கு துணை முதலமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தான் என்று பேசினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் அன்பின் மகேஷ் பேசிய சம்பவம் அனைவரையும் கவனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin is the Deputy Chief Minister Anbil Mahesh


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->