பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வருகின்ற பத்தாம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைந்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் தங்களது இறுதி கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேரணியாக சென்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், இந்த இடைத்தேர்தல் மிகமுக்கியமான தேர்தல், சமூக நீதிக்கான தேர்தல். 

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரத்து செய்தார்களா?

நீட் தேர்வு ரத்து குறித்து, பிரசாரத்திற்கு வந்துள்ள அமைச்சர் உதயநிதியிடம் கேளுங்கள். நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அந்த ரகசியம் என்ன என்று கேளுங்கள்.

மாம்பழத்திற்கு வாக்களித்தால், நல்ல எதிர்காலம் உண்டு. திமுக அரசிடம் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை.

நமது பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரத்தில் பங்கேற்காத வகையில் மக்களை அடைத்து வைக்கின்றனர். மக்களை அடைத்து வைக்கும் கலாச்சாரத்தை கண்டுபிடித்தவர் செந்தில் பாலாஜி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by election PMK leader anbumani ramadas campaign


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->