வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர்... விக்கிரவாண்டி தொகுதியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal



விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததால் விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவியது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று காலை 8 மணி முதல் எண்ணபட்டு வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தபால் வாக்குகள், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என தொடர்ந்து எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் விக்கிரவாண்டியில் போலி அடையாள அட்டையை வைத்துக் கொண்டு வாக்கு என்னும் மையத்திற்குள் நபர் ஒருவர் நுழைய முயன்றதால், அந்த பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் போலி அடையாள அட்டை வைத்திருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு என்னும் மையத்திற்குள் நபர் அது மீறி நுழைய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi constituency vote counting center person tried trespass 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->