நாதக சீமான் மேல் பைத்தியம்! சீமானிடம் பேச வேண்டும்! கத்தியால் நெஞ்சை கிழித்துக்கொண்ட நபர்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேச வேண்டும் என குடும்பத் தலைவர் குடும்பத்தினரை வீட்டில் அடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் இளங்காமணி (47). தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், இளங்காமணி தனது மனைவி மற்றும் மகன்களை வீட்டுக்குள் வைத்து பூட்டியதுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேச வேண்டும். இல்லையென்றால் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு பற்ற வைத்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளங்காமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகாத வகையில் முன் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

போலீசார் இளங்காமணியை வீட்டிலிருந்து வெளியே மீட்டு வரும்போது சீமானை பார்க்க வேண்டும் என்று கூறி காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் கிழித்துக்கொண்டுள்ளார். லேசாக காயம் அடைந்த அவரை போலீசார் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

சிகாமணியின் குடும்பத்தினரை பத்திரமாக மீட்ட போலீசார். அவர்களிடம் விசாரணை நடத்தினர். இளங்காமணி  கடந்த இரண்டு நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததன் காரணமாக போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு அசம்பாவிதம் சம்பவங்களை தவிர்த்து உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

want to talk to Seaman A man who had his chest ripped open with a knife


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->