காவிரி டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு..! - Seithipunal
Seithipunal


​மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைந்துள்ளது. அதாவது, மேட்டூர் அணை கடந்த ஆண்டு 03-வது முறை நிரம்பியது. குறிப்பாக ஆண்டின் கடைசி நாளில் அணை 03-வது முறையாக நிரம்பியதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது கடந்த 1-ந் தேதி முதல் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 05 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப்பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 04 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

அத்துடன், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 112.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 321 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Water release from Mettur dam reduced for Cauvery Delta irrigation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->