மக்களே கவலை வேண்டாம்! 3 நாளும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!  - Seithipunal
Seithipunal


பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி கிழமைகளில் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

மேலும் தற்போது ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்னும் அதிகப்படியான பயணத்தை மக்கள் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

வரும் மே 31, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிட்டு உள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weekend Travel Special bus may 31


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->