தலைமைச் செயலத்துக்கு எதிரே பெண் செய்த செயலால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலகத்துக்கு எதிரே பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் சேர்ந்தவர் கௌசல்யா. இவருக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பது அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது வீட்டை மீட்டு தரக்கோரி கவுசல்யா காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.

 ஆனால், அந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த கௌசல்யா இன்று தலைமைச் செயலகத்துக்கு எதிரே பெற்றோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட காவலர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர் .

மேலும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்திற்கு எதிரே பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman attempts suicide in front of Secretariat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->