செல்போன் பேசியதை கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


செல்போனில் பேசியதை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, கோயம்பேடு பகுதியில் வசித்து வருபவர் காசிநாதன் . இவரின் மகள் குணவதி அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதில், கோபித்து கொண்டு அறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தகமடைந்த அவரது பெற்றோர் அறைக்கதவை தட்டியும் திறக்காததால் உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed Suicide In Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->