ராமநாதபுரம் || திருமணமான 3 நாளில் காதலனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்! இறுதியில் நடந்த டிவிஸ்ட்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வலசை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்மிதா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது ராமநாதபுரம் பாரதி நகர் கான்சாகிப் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமலேயே வீடு எடுத்து தங்கி வாழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே ஸ்மிதாவின் வீட்டில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து அவர் வசந்தகுமாரிடம் தெரிவித்தபோது வசந்தகுமார் 'அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே தற்காலிகத்திற்கு பிரச்சனைகளை சமாளிக்க வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்'.. 'இரண்டு மூன்று நாட்களில் நான் மீண்டும் உனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதோடு நம்முடைய காதல் விவகாரத்தை உன் புதிய கணவருக்கும் செல்போனில் அனுப்பி வைத்து விடுகிறேன்.

நான் சொன்னவுடன் வீட்டுக்குள் பிரச்சனை ஏற்படும், அதனை சாதகமாக வைத்து நீ வீட்டை விட்டு வெளியே வந்து விடு உடனே நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். அதன் படி ஸ்மிதா திருமணமும் செய்து கொண்டு, வீட்டில் குழப்பம் ஏற்பட்டு மீண்டும் வசந்தகுமாரிடமே சென்றுள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது அதனை பொருட்படுத்தாமல் சாக்குப் போக்கு சொல்லி அலைக்கழித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு வசந்தகுமார் தனக்கு வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறி தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என்று ஸ்மிதா புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது ராமநாதபுரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில், காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman petition against boy friend in ramanathapuram


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->