மதுபோதையில் கணவர் அடித்ததால் மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் கணவர் அடித்ததால் மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு.!

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை அருகே தங்கவேல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி-பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே, ரகுபதி கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வந்துள்ளார். 

அதன் படி அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். இந்த நிலையில், ரகுபதி தேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் தம்பதியினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அதில் ஆத்திரமடைந்த ரகுபதி மனைவியை அடித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அவரது மகன்கள் கதறி அழுதுள்ளனர். 

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide for beating husband in chennai korukkupettai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->