துணை முதல்வர் பெயரில் மோசடி - கையும் களவுமாக சிக்கிய கில்லாடி பெண்.!
women arrested for use deputy cm name of money fraud
நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பிரபலங்களின் பெயர்களில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. வேலைவாங்கித் தருவதாக கூறி அதிகளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாற்றுத்திறனாளி போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சேலத்தை சேர்ந்த வித்யா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women arrested for use deputy cm name of money fraud