மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை - போக்சோ சட்டத்தின் கீழ் கைதான வாலிபர்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் (வயது 35). கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர் கணவர் இறந்த பிறகு அரக்கோணத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு ஏமாந்துள்ளார். 

இதன் பின்னர் மீண்டும் அவர் குழந்தைகளுடன் காஞ்சிபுரத்துக்கே வந்து வசித்து வந்த நிலையில் தினேஷ்குமார் என்ற வாலிபருடன் பேஸ்புக் மூலம் பழகி உள்ளார். 

இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த பெண்ணின் மகளான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இது போன்ற செயலின் தினேஷ்குமார் பலமுறை ஈடுபட்டு வந்ததால் மாணவி என்ன செய்வது என தெரியாமல் அவரது தாயிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி தினேஷ் குமார் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested under pocso act


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->