மதுரையில் சோகம் - செல்போன் வெடித்து வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


செல்போன்களை தூங்கபோகும் முன்பு படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதை ஏராளமானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், செல்போன் வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. 

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மதுரை மாவட்டத்தில் இருந்து பரமக்குடி நோக்கி இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது.

இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth died in madurai for mobile blast


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->