மதுபோதையில் ரகளை - தட்டிக்கேட்ட ரயில் பயணிகளுக்கு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சென்றுக் கொண்டிருந்த ஆலப்பி விரைவு ரயிலில் ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு பெட்டியில் ஏறிய இளைஞர்கள் சிலர் கழிவறை வாயிலில் அமர்ந்து புகை பிடித்த படியும், சத்தமாக பாடல்களை பாடியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியபடி வந்துள்ளனர்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பயணிகள், இளைஞர்களிடம் இதுதொடர்பாக கேட்ட போது, மதுபோதையில் இருந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு, திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்த பயணிகள், நிகழ்வின் போது ரயில்வே காவலர்கள், பயணசீட்டு பரிசோதகர்கள் என்று யாரும் உதவ வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, ரயில் பயணிகள் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவரை கைது செய்தனர். மேலும் சிலரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth threats to passangers in train


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->