யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்றார்!! - Seithipunal
Seithipunal


தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்றார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண்காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் குற்ற பிரிவு போலீசாரால் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனை அடுத்து அவர் வாகனத்தை சோதனை செய்தபோது காரில் 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் கார் விபத்துக்களானது.

அதன் பின்னர் , கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சவுக்கு சங்கர். 7க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையம் உத்தரவின் பெயரில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பாய்ந்தது. இதனை அடுத்து சவுக்கு சங்கர் தாயார் குண்டாஸ் சட்டத்தை நீக்கி தன் மகனை ஜாமினில் வெளியிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

அதனை அடுத்து, சவுக்கு சங்கர் ஆதரவு வழக்கறிஞர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குண்டாஸ் சட்டத்தை நீக்கக்கோரியும் சவுக்கு சங்கருக்கு  இடைக்கால ஜாமின் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு அளித்தார். தற்போது யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்றார் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTuber savukku Shankar withdraws bail


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->