மக்களே உஷார்!...தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை - வானிலை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று  'டானா' புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று  ஒடிசாவின் புரி- சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்பதால், மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், திருப்பூர், அரியலூர், ஈரோடு, தென்காசி, குமரி, நெல்லை, கோவை, திண்டுக்கல், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்னகிரி உள்ளியிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People alert heavy rain in 19 districts of tamil nadu today weather


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->