30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்.!
rain to 30 districts in tamilnadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் முப்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாமக்கல், கரூர், நீலகிரி, திருப்பூர், அரியலூர், நாகை, திருவண்ணாமலை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
English Summary
rain to 30 districts in tamilnadu