தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.!
rain to 5 districts in tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதற்கிடையே மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி இரண்டு நாட்களில் நகரக்கூடும் என்று வநிலைமையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain to 5 districts in tamilnadu