காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி! - Seithipunal
Seithipunal


வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

தெற்கு ஆந்திராவில் நெல்லூர் - புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது அதிகனமழை பெய்யும்.

அடுத்த 24 மணிநேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்படுகிறது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.

அதிகனமழை பெய்யும் என்பதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை. மழைக்காக மட்டுமே ரெட் அலர்ட் கிடையாது - பாதிப்புகளையும் கருத்தில் கொண்டே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் என்று சொன்னாலே 20 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்யும் என்று கிடையாது" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Chennai weather report rain alert


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->