வங்காளதேசம் || கோவிலுக்கு சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 24 பேர் பலி - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் பாதேஷ்வர் கோயிலுக்கு, கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஞ்ச்பீர், பங்கரி, மரியா மற்றும் போடா பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட இந்து பக்தர்கள் மஹாளய விழாவை முன்னிட்டு பாதேஷ்வர் கோவிலுக்கு ஒரே படகில் சென்று கொண்டிருந்த போது அவுலியார் காட் பகுதியில் படகு கவிழ்ந்தது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அதிக பாரம் ஏற்றிச் சென்றதே விபத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

24 died as boat capsized in river in Bangladesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->