கிரீஸில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான கிரீஸின் தென்கிழக்கு ஏஜியன் கடலில் லெரோஸ் தீவு அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கியிலிருந்து அண்டை நாடான கிரீஸ்க்கு செல்வதற்காக 40க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது லெரோஸ் தீவு அருகே படகு சென்றபோது திடீரென கடல் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த வந்த கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இறந்த நிலையில் ஒரு பெண்ணையும், கடலில் சிக்கிய மற்ற 39 பயணிகளை உயிருடன் மீட்டனர். ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என்றும், பெரும்பாலும் இத்தாலி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 died as migrant boat capsizes in greece


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->