மன்னர் சார்லஸ் முடிசூட்டும் விழா.! புதிய தகவலை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் முடிசூட்டும் விழாவில் நடப்பவை குறித்த புதிய விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

மே 6 ஆம் தேதி காலை, மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகிய இருவரும் தங்கமுலாம் பூசப்பட்ட மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட குதிரை வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு பயணிப்பார்கள்.

மன்னரின் பயணம், பாராளுமன்ற சதுக்கத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் இருந்து பரந்த சரணாலயம் வரை பயணித்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தை வந்தடையும். அங்கு முடிசூட்டு சேவை 11 மணிக்கு தொடங்கும்.

சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்தn700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் முடிசூட்டு விழாவின்போது, மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார்.

இதைத்தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார். பின்பு புனித எட்வேர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும். முடிசூட்டும் சேவையைத் தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்பியதும், யுனைடெட் கிங்டம் மற்றும் காமன்வெல்த் ஆயுதப் படைகளிடமிருந்து ராயல் சல்யூட் பெறுவார்கள்.

இதையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து, நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். இதைத்தொடர்ந்து இந்நாளே மன்னர் சார்லசின் மனைவி கமிலா இங்கிலாந்து ராணியாக அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Buckingham Palace released new details about King Charles coronation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->