நிலவில் சீன விண்கலம்.. வெற்றிகரமாக தரையிறங்கியது..!! - Seithipunal
Seithipunal


நிலவில் அவ்வப்போது பல நாடுகள் ஆய்வு மேற்கொள்ளவென விண்கலங்களை அனுப்பி வருகின்றன. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். இந்நிலையில் சீனா நிலாவில் உள்ள மண் மற்றும் பாறையின் மாதிரிகளை சேகரிக்க சாங் - இ என்ற விண்கல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தின்படி சாங் - இ யின் ஆறாவது விண்கலத்தை கடந்த மே மாதம் 3ம் தேதி லாங் மார்ச் - 5 என்ற ராக்கெட்டில் வைத்து விண்வெளிக்கு அனுப்பியது. இதையடுத்து சாங் இ  - 6 விண்கலம் இன்று நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

இதுவரை வேறு எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவத்தில் உள்ள எய்ட்கன் படுகையில் உள்ள ஒரு பள்ளத்தில் சீன விண்கலம் தரையிறங்கி உள்ளதாக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விண்கலம் தரையிறங்கியுள்ள இப்பகுதி அப்பல்லோ பேசின் என்று அழைக்கப்படுகிறது. 

நிலவின் இரு பக்கங்களிலும் உள்ள வேறுபாடுகள் மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ள நிலவின் தொலைதூர பகுதியில் இருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. மேலும் தொலைத்தொடர்புக்கு மிகவும் கடினமான, ஒரு அரிதான பகுதியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுவது இதுவே முதல் முறை" என்று சீனா தெரிவித்துள்ளது. 

இந்த விண்கலம் தரையிறங்கிய 48 மணி நேரத்திற்குள் அங்குள்ள மாதிரிகளை சேகரிக்க ஒரு ரோபோ அங்கு பணியை தொடங்கும் என்று சீனா கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinas SpaceCraft Succesfully Landed in Moon


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->