100 பேரின் உயிரை பறித்த திருமண விருந்து - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


100 பேரின் உயிரை பறித்த திருமண விருந்து - நடந்தது என்ன?

ஈராக் நாட்டில் உள்ள நையன்வே மாகாணம் ஹமதன்யா என்ற பகுதியில் ஒரு மண்டபத்தில் திருமண விருந்து நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதில், அந்த மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி 100 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தீவிபத்துக் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, "திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவர் எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்ததே இந்த மோசமான பேரழிவுக்கு காரணம். அதே போல் திருமண மண்டபத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் ஈராக்கில் தடை செய்யப்பட்ட பொருட்கள்.

அத்தகைய பொருட்கள் கொண்டு கட்டடப்பட்டதால்  தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண விருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hundrad peoples died in erak for fire accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->