கியூபாவில் ஹோட்டல் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


கியூபாவில் ஹோட்டல் ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

வட அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள சரடோகா என்ற ஹோட்டல் க்யூபா தலைநகரமான ஹவானாவில் உள்ளது. வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்த ஹோட்டலில் திடீரென்று பயங்கரமான வெடி சத்தம் ஏற்பட்டது.

இதில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு பணியினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் ஹோட்டலில் சமையல் கியாஸ் சிலிண்டர் கசிந்ததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Increase in the number of casualties in the cuba hotel explosion


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->