இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.! பீதியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா கிழக்கு ஜாவா மாகாணத்தில் இன்று காலை 11.22 மணி அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 132 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான எந்த ஒரு எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் பொருட்கள் சேதம் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia earthquake 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->