இந்தோனேசியாவில் 7 சர்வதேச விமான நிலையங்கள் திடீர் மூடல்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியா, வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கருப்பு புகையை கக்கியவுடன் வெடித்து சிதறியது. 

பின்னர் அமைதியான நிலையை கடந்த சில நாட்களில் எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக எரிமலை அடிவாரக் குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். 

இதனை தொடர்ந்து எரிமலை வெடிப்பை கண்காணித்து வரும் நிலையில், தாக்கம் அதிகமாக இருப்பதால் கல்வி நிறுவனம், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை தவிர்க்கும் விதமாக சர்வதேச விமான நிலையமான சாம்ரதுலங்கி உள்பட 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia international airports closure 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->