இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை: சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்.!   - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா, ஜாவா தெருவில் நேற்று முன்தினம் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறியது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 800க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் எரிமலையை சுற்றி நான்கு கிலோமீட்டர் தொலைவில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அந்நாட்டு அரசு, எரிமலை வெடிப்பு தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia Volcano erupted 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->