காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் - 22 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பணய கைதிகளாக சிலர் சிறை பிடிக்கப்பட்டனர்.

இதிலிருந்து இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. இதில், மேற்கு கரை பகுதி, காசா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தாலும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

தொடர்ந்து  இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காசாவில் உள்ள செய்டவுன் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel attack on Gaza 22 dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->