மீண்டும் ஏவுகணை சோதனை..எதிரி நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் வடகொரியா! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு முதல் ஏவுகணை சோதனையை வடகொரியா  நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.இதனால் எதிரி நாடுகளுக்கு பயமுறுத்தலை ஏற்ப்படுத்த  அவ்வப்போது அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துவருகிறது வடகொரியா. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்குமுன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது.

உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.இதனால் எதிரிநாடுகள் கலக்கத்தில் உள்ளன . வடகொரியாவில் இருந்து நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 1 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் பயணித்து வடகிழக்கு கடல் பகுதியில் விழுந்தது. திட்டமிட்ட படி இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.2025ம் ஆண்டு வடகொரியா நடத்திய முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Missile test again North Korea is a threat to its enemies


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->