ரெயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா...! பறிமுதல் செய்த ஆர்.பி.எப் போலீஸ்..!!! - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை 1ல் கேட்பாரற்ற நிலையில் சந்தேகிக்கும் விதமாக பை ஒன்று கிடந்தது.

இதனால் ஐயத்தினை கொண்டு சந்தேகமடைந்த RBF காவலர்கள்  அந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது, 12 கிலோ கஞ்சா அந்த பையில் இருந்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த RBF காவலர்கள் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலில் ஒப்படைத்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.6,00,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது எப்படி அந்த இடத்திற்கு வந்தது? யார் இதைக்கொண்டு வந்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RPF police seize 12 kg of ganja at railway station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->