தாயின் கவனகுறைவால் மகளுக்கு நேர்ந்த விபரீதம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அரிதான ஒரு விபத்தில் தாயின் கவனக்குறைவால் அவரின் 6-வயது மகள் உயிரிழந்துவிட்டார்:

மரிகோபா கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் 2 நாட்களுக்கு முன், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் ஏரியில் பொழுதுபோக்கிற்காக ஒரே படகில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் சென்றனர். 

அந்த படகு ஏரியில் நிறுத்தப்பட்டதால், படகில் இருந்த ஒரு சிறுமி, அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதியில் நீந்தி கொண்டு விளையாடினார். தனது குழந்தை படகின் பின்புறம் நீந்தி கொண்டிருப்பது தெரியாமல் அந்த சிறுமியின் தாய் அந்த படகை இயக்கியபொழுது படகின் இயந்திரத்தில் இறக்கையில் சிறுமியின் கால் சிக்கி துண்டானது.  

அந்த சிறுமியின் தந்தை, நீந்தி கொண்டிருந்த படகின் அருகே நீரில் யாரோ தவிப்பதை அறிந்து கொண்டு வேகமாக அருகே சென்று பார்த்ததில் அது தங்களது மகள் என இருவரும் அறிந்தவுடன், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவசர உதவிக்கான 911 எண்ணை தொடர்பு கொண்டனர். 

ஆனால் நீண்ட நேரம் தொடர்பு கிடைக்காமல் தவித்ததால் அச்சிறுமியை அருகில் இருந்தவர்களின் படகில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர். 

பின்னர் ஏரிக்கரையில் இருந்த அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் சிறுமிக்கு உடனடியாக அவசர உதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை தெரிவித்திருப்பதாவது, இது எதிர்பாராத விபத்துதான். 

இருந்தாலும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். படகில் பயணித்த 12 பேரும் உயிர் காக்கும் மேல்சட்டைகளை அணிந்திருந்தனர். யாரும் மது அருந்தியிருக்கவில்லை. இவ்வாறு காவல்துறை தெரிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mothers carelessness daughter death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->