மும்பை || வீட்டிற்குள் ராக்கெட் விட்ட மர்ம நபர்.! போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிலும் தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். 

இந்நிலையில், மும்பை மாநிலத்தில் தானே அருகே உள்ள உல்ஹால் நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் மர்மநபர் ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார். 

குடியிருப்பில் ராக்கெட் விட்ட நபர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடியிருப்பு வீட்டிற்குள் ராக்கெட் விட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near mumbai rocket into apartment house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->