'மூளையை உண்ணும் அமீபா' எனும் அரியவகை நோய்.. தென் கொரியாவில் முதல் பலி.! - Seithipunal
Seithipunal


மூளையை உண்ணும் அரிய வகை நோயால் தென்கொரியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தென்கொரியாவில் நெக்லேரியா ஃபோலேரி என்னும் 'மூளையை உண்ணும் அமீபா' எனும் அரிய வகை நோயால் தென்கொரியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 50 வயதான அந்த நபர் தாய்லாந்தில் இருந்து திரும்பிய பிறகு தனக்கு வித்தியாசமான அறிகுறிகள் தோன்றிய 10 நாட்களில் விழுந்துள்ளதாக தென் கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நெக்லேரியா ஃபோலேரி இனம் அமீபாக்கள் நன்னீர் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் இருந்து பரவுவதாக கூறப்படுகிறது. இந்த அமீபாக்கள் மனிதனின் மூக்கு வழியாக மூளைக்குள் சென்று மூளை திசுக்களை அழித்து செயலிழக்க வைப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New brain disease in south korea


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->